புதுக்கோட்டை, நவ.16- புதிய பேருந்து நிலையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி சேவையினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத் தின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் நட மாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக் கும் வகையில் மருத்துவர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட நபர்கள் பணிய மர்த்தப்பட்டு கால்நடைகளுக்கு தேவை யான சிகிச்சைகளை வழங்க உள்ள னர். மேலும், விவசாயிகள் இச்சேவை யினை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் தங்க ளின் இருப்பிடங்களுக்கே நேரடியாக வந்து கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர் பா. ஆறுமுகம்,கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.இளங் கோவன், துணை இயக்குநர் மரு.சம்பத், உதவி இயக்குநர் மரு.சாகுல் ஹமீது, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணி யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.