tamilnadu

img

நுண்ணுயிர் பாசன முறை பயிற்சி

 அறந்தாங்கி, அக்.17- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் விரிவாக்க திட்டத்தின் கீழ் மாநிலத்திற்குள்ளான கற்றறிவு பயணம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி மற்றும் நுண்ணுயிர் பாசன முறை என்ற தலைப்பில் பயிற்சிக்காக 40 விவசாயிகள் உடுமலைப்பேட்டை ஜெயின் இரிகேசன் நிறுவனத்தில் 3 நாள் பயிற்சியில் கலந்து கொண்டனர். ஜெயின் நிறுவன அலுவலர்கள் ரமேஷ்குமார் மற்றும் பாலகுமார் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். பயிற்சி  ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் (அட்மா) இரா. மகேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தராஜ் மற்றும் வி. கவியரசன் செய்திருந்தனர்.