tamilnadu

சுமை தூக்கும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு நிவாரண உதவி

அறந்தாங்கி, மே 6- அறந்தாங்கியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 1 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் காய்கறிகள் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. கொரோனா எதிரொலி காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, அதன்  ஒரு பகுதியாக தமிழகத்திலும் தடை உத்தரவு  கடைபிடிக்கப்பட்டு வருகிற நிலையில் பொது மக்கள் யாரும் வெளியே வராமல் வீடுகளி லேயே முடங்கியுள்ளனர். இதனால் ஏழை-எளிய மக்கள் உணவிற்காக மிகவும் சிரமப்படு கின்றனர்.  இந்நிலையில் அறந்தாங்கியில் வேலை யிழந்து தவித்து வரும் தட்டுவண்டித் தொழிலா ளர்கள், அவசரகால ஊர்தி பணியாளர்கள், சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்கள் ஆகிய  150-க்கும் மேற்பட்டோருக்கு தலா 5 கிலோ  அரிசி பை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கத் தலைவர் தங்கதுரை தலைமையில், வட்டாட்சியர் சிவ குமார் அரிசி பையை வழங்கினார்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார் (திமுக) சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி, மளி கைப் பொருட்கள் வழங்கப்பட்டன. புதன்கி ழமை ஆட்டோ நிலைய, சுமை தூக்கும் தொழி லாளர்கள் சங்க அலுவலகம் ஆகிய இடங்க ளில், சமூக இடைவெளியைப் பின்பற்றி நடை பெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார், பயனா ளிகள் 100 பேருக்கு நிவாரணப் பொருட்களை  வழங்கினார்.

பள்ளி மாணவர்களின்  குடும்பத்திற்கு நிவாரணம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  ஒன்றியம் சிலட்டுர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் பயிலும் மாணவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படும் நிலை யில், இப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்கள் இணைந்து நிவாரணப் பொருட் கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் திரா விடச் செல்வன், பள்ளி தலைமை ஆசிரியர்  சுதாகர், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரி யர் கார்த்திகா, அறிவியல் ஆசிரியர் கோவிந்த ராஜ், முதுகலை ஆசிரியர் இளங்கோ ஆகி யோர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், கபசுர குடிநீர் பவுடர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட் களை வழங்கினர்.  மேலும் கொரோனா பணியில் அயராது  பணியாற்றும் காவலர்கள், தன்னார்வலர்க ளுக்கு கபசுரகுடிநீர் பவுடர், முகக் கவசம் வழங்கினர்.