புதுக்கோட்டை, பிப்.6- புதுக்கோட்டை துணை இயக்குநர் மருத்துவப் பணி கள் (தொழுநோய்) அலுவல கமும், நேரு யுவக்கேந்திரா வும் இணைந்து தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கை வியாழக்கிழமை புதுக் கோடடையில் நடத்தியது. கருத்தரங்கிற்கு நேரு யுவகேந்திரா ஒருங்கி ணைப்பாளர் ஜோயல் பிரபா கர் தலைமை வகித்தார். மாவட்ட நலக்கல்வியாளர் ஜி.வெங்கட்ராமன் தொழு நோய் விழிப்புணர்வு கையே டுகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். அவர் பேசுகை யில், மத்திய, மாநில அரசுக ளின் தொடர் நடவடிக்கைக ளால் பத்தாயிரம் பேருக்கு 118 பேருக்கு தொழுநோய் பரவியிருந்த நிலையில் தற் பொழுது 0.4 என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒருங்கி ணைந்து தொழுநோய் இல்லாத இந்தியாவை உரு வாக்கப் பாடுபடுவோம் என்றார். தமிழந்நாடு அறிவி யல் இயக்க மாவட்த் தலை வர் கே.சதாசிவம், துணைத் தலைவர் எம்.வீரமுத்து, நேரு யுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பாரத், கணக்காளர் நமச்சிவாயம், மருத்துவமல்லா மேற் பார்வையாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் வர வேற்க, சுகாதார ஆய்வாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.