புதுக்கோட்டை, ஜூன் 6-புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் சுப்பையன், வட்டாட்சியர்கள் பரணி, திருமலை உள்படபலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 12 வட்டங்களில் உள்ள 757 வருவாய் கிராமங்களில் 19-ம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.