புதுக்கோட்டை: வெளிநாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் தகவல்களை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாகவே உள்ளனர். தமிழ்நாட்டிலும் வெளிநாட்டு நோயாளிகள் மட்டுமே கண்டறி யப்பட்டுள்ளனர். எனவே, வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வெளிநாடுகள், வெளி மாநிலத்திலி ருந்து புதிதாக வருகை தரும் பயணிகள் தாங்களாகவே முன்வந்து மாவட்டத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள கொரோனா முன்தடுப்புப் பணி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தங்களின் தற்போதைய முழுமையான முகவரியுடன் தங்களின் வெளிநாடு, வெளிமாநில தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும்; பதிவு செய்து கொரோனா பாதிப்பிலிருந்து தங்களையும் பொதுமக்களையும் பாதுகாத்திட உதவ வேண்டும். மாநில கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 104, 1077, 1800-120-555550 மற்றும் பொது சுகாதாரத்துறை, சென்னை 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 044-29510400, 044-29510500, 9444340496, 8714448477 மற்றும் மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04322-222207 மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், புதுக்கோட்டை 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04322-221733 மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், அறந்தாங்கி 24 மணிநேர கட்டுப் பாட்டு அறை தொலைபேசி எண் 04371-220501 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.