அறந்தாங்கி, ஜூன் 8- புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கல்லணை கால்வாய் பகுதிகளில் சுமார் ரூ.1.74 லட்சம் மதிப்பில் 94 கிமீ தூரத்திற்கு நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணி களை சிறப்பு அதிகாரி அபூர்வா மற்றும் ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆகியோர் ஆளில்லா பறக்கும் விமா னம் மூலம் ஆய்வு செய்த னர். பின்னர் சிறப்பு கண்கா ணிப்பு அலுவலர் அபூர்வா கூறுகையில், சிறப்பு தூர் வாரும் பணிகள் எழுபத்தி ஒரு கிலோமீட்டர் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பகுதி கள் இன்னும் ஒரு வார காலத் தில் முடிவடையும். தூர்வா ரும் பணிகள் தமிழகத்தில் முதல் முறையாக புதுக் கோட்டை மாவட்டத்தில் ஆள் இல்லாத விமானம் மூலம் துல்லியமாக ஆய்வு செய்யப்படுகிறது. இந்தா ண்டு கடைமடை பகுதிகளு க்கு கூடுதல் தண்ணீர் வந்து சேரும் என்றார்.