tamilnadu

புதுக்கோட்டையில் 21,818 பேருக்கு கொரோனா பரிசோதனை

புதுக்கோட்டை, ஜூலை 21- புதுக்கோட்டை மாவட்ட த்தில் இதுவரை 21,818 பே ருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மா வட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  கொரோனா தடுப்பு  குறித்து அலுவலர்களு டனான ஆலோசனைக்குப் பின் அவர் கூறுகையில், மாவ ட்டத்தில் இதுவரை 1,016 பேர் கொரோனாவல் பாதி க்கப்பட்டுள்ளனர். ஜூலை 19 நிலவரப்படி 21,818 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளில் மொத்தம் 1,500 படுக்கைகள் ஏற்படுத்த ப்பட்டுள்ளதோடு கூடுதலாக 500 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவ ட்டம் முழுவதும் 37 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.  வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களை தனிமைப்ப டுத்துவதற்கு மாத்தூர், திரு மயம், கே.புதுப்பட்டி, புது க்கோட்டை, களமாவூர் உள்ளிட்ட இடங்களில் முகா ம்கள் அமைக்கப்பட்டு தற்பொழுது 124 பேர் கண்கா ணிப்பில் உள்ளனர். மேலும்  631 பேர் வீடுகளில் தனி மைப்படுத்த ப்பட்டுள்ளனர்.  மனநலப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளோடு சத்தான உணவு வழங்குவ திலும் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இரு ந்து இதுவரை 558 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ள னர் என்றார்.