பொன்னமராவதி, ஜூலை 29- பொன்னமராவதி அருகே உள்ள வரலாற்று சிறப்பு வா ய்ந்த தற்போது ‘பிரா ன்மலை’ என்று அழைக்க க்கூடிய பாரிஆண்ட பரம்பு மலையை குவாரி என்ற பெய ரில் மலையை உடைப்பவர்க ளிடம் இருந்து பாதுகாக்க வும், அவர்களுக்கு வழங்க ப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி யும் பொன்னமராவதியில் சிஐடியு, வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேரு ந்து நிலையம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொ றுப்பாளர் கே.குமார், மாதர் சங்கத்தின் ஒன்றிய செய லாளர் ஆர்.மதியரசி ஆகி யோர் தலைமை வகித்த னர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாரா யணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி, வி.தொ.ச மாவட்ட பொரு ளாளர் கே.சண்முகம், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் அ.இளையராஜா, பரம்பு மலை பாதுகாப்பு இயக்க தலைவர் செ.கர்ணன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி. சுசீலா,சிபிஎம் சிங்கம்புணரி தாலுகா குழு உறுப்பினர் சிங்காரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரலாற்று சிறப்பு வாய்ந்த பரம்புமலையை பாதுகாக்க வேண்டும், அதில் தனிநபர்கள் இரண்டு பேர் பெயரில் சுமார் 1500 ஏக்க ருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும், பரம்பு மலையில் செய ல்பட்டு வரும் கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும், பொன்னமராவதி பழைய பேருந்து நிலையத்தில் தனிநபர்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தினர்.