tamilnadu

img

வண்ண வண்ண ஓவியங்களால் வகுப்பறைகளை அசத்தும் அரசுப் பள்ளி....

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வகுப்பறைக் கட்டிடத்தில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.குளத்தூர் அருகே லெக்கணாப்பட்டி அரசுஉயர்நிலைப்பள்ளியில் 6-லிருந்து 10 ஆம் வகுப்புவரை 236 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இங்குள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் 7 வகுப்பறைகளும், 7 ஆசிரியர்களும்உள்ளன. வகுப்பறைகளின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் பல்வேறு வகையான வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. குறிப்பாக மூன்று வகுப்பறைகளை இணைத்துரயில் பெட்டி போன்று வர்ணம் தீட்டப்பட்டுள் ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள் ளது.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஆண்டனி கூறுகையில், மன இறுக்கமின்றி மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களை கற்க வசதியாக பள்ளி வளாகத்தில் கான்கிரீட்டில் ஆன 8 அடி உயரத்தில் உலக உருண்டை,கூழாங்கற்களைக் கொண்டு வண்ணத்துப் பூச்சி உள்ளிட்ட பாடத்திட்டங்களோடு தொடர்புடைய பல்வேறு படைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில் ‘போக்குவரத்து’ என்னும்தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஓவியம்மாணவர்கள் ரயில் பயணம் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள் ளது. மூன்று வகுப்பறைகளின் வெளிப்புற சுவற்றில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளவர்கள் அனைவரும் எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் என்பது மாணவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது. ஓவியங்களை ஓவிய ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.மேலும், பள்ளி வளாகம் பசுமையாக இருக்க வேண்டுமென்பதற்காக 400-க்கும்மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு வகைன பறவைக் கூண்டுகள் வைக்கப்பட் டுள்ளன. இதனால் பல்வேறு வகையான பறவைகள் இங்கு வருகின்றன. 
அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பள்ளி வளாகத்தில் இதுபோன்ற ஏராளமான புதுமைகள் ஏற்படுத்தியதன் விளைவாக கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கல்வித் தரமும் மேம்பட்டு உள்ளது” என்றார்.

;