புதுக்கோட்டை, அக்.21- மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணை யான ஊதியம் மற்றும் பணப்படிகளை மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் அரசு மருத்து வர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தி ற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அப்துல் குத்தூஸ் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில் ஏராளமான அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.