tamilnadu

காந்தி- 150 மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கம் மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை அக்.21- புதுக்கோட்டையில் காந்தி-150’ நடைபெறவுள்ள மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டள்ளன. இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் நா.முத்துநிலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி மக்கள் ஒற்றமைக் கருத்தரங்கம் வருகின்ற அக்.31 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. இதில் தமுஎகச மாநிலத் தலைவரும் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினருமாக எழுத்தாளர் சு.வெங்க டேசன் சிறப்புரையாற்றுகிறார். கருத்தரங்கை யொட்டி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்படுகிறது. 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் ஓவியப்போட்டியில் 1.‘அண்ணல் காந்தி, அண்ணல் அம்பேத்கர், அப்துல்கலாம்’ 2.மத சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் ‘சேவியர், சாமிநாதன், சாகுல்- நாங்கள் இந்தியரே!’ ஆகிய தலைப்பு களில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரையலாம். ஓவியம் வரைவதற்கான தாள் தரப்படும். எழுதுபொருட்கள் மாணவர்கள் கொண்டு வர வேண்டும். 9,10,11,12 வருப்புகளுக்கு ‘வேற்றுமையில் ஒற்றுமையே வெற்றிகரமான இந்தியா’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெறும். ஏ4 தாளில் 3 பக்க அளவில் போட்டி நடைபெறும் இடத்திலேயே எழுத வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு ‘சாதி மதங்களை ஒருகை பார்ப்போம்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறும். 3 நிமி டத்திற்குள் மாணவர்கள் தங்களது பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனச் சான்றுடன் வர வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து ஒரு போட்டிக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டிகள் வருகின்ற 23.10.2019 புதன்கிழமையன்று காலை 9.30 மணிக்கு புதுக்கோட்டை பேருந்துநிலைய மாடியில் உள்ள ‘ஆக்ஸ்ஃபோர்டு உணவகக் கல்லூரியில் நடைபெறும்.  போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்க ளுக்கு அக்.31 அன்று நடைபெறும் மக்கள் ஒன்றுமைக் கருத்தரங்கங்களில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனால் பரிசு வழங்கி கவுரவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94431-93293 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.