புதுக்கோட்டை, ஜூலை 24- புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாசனதாரர்கள் சங்கத்தினருக்கு குடிமராமத்து பணிகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜூலை 25 அன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமரா மத்து திட்டத்தின் கீழ் தெற்கு வெள்ளாறு வடிநில கோட்டத் தின் மூலம் 59 பணிகள் ரூ.17.91 கோடி மதிப்பீட்டிலும், தஞ்சை கல்லணைக் கால்வாய் கோட்டம் மூலம் 4 பணிகள் ரூ.1.88 கோடி மதிப்பீட்டிலும், பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்டத்தின் மூலம் 3 பணிகள் ரூ.48 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 66 பணிகள் ரூ.20.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுவரை 59 பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. குடிமராமத்து பணிகளானது பதிவு செய்யப்பட்ட பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இப்பணியினை சிறந்த முறையில் செயல்படுத்தும் வகையில் மேற்கண்ட சங்கங்கள் கூட்டு வங்கி கணக்கு துவக்குதல், நிரந்தர கணக்கு எண் பெறுதல், சரக்கு மற்றும் சேவை வரி எண் பெறுதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மேற்கண்ட சங்கங்கள் கலந்து கொண்டு பயன டையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.