புதுக்கோட்டை, அக்.2- காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரை யப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திரு வரங்குளம் ஒன்றியத்திலுள்ள அரை யப்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலு வலர் வி.மணிமேகலை தலைமையில், ஊராட்சி செயலாளர் பி.வனிதா முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. பழுதடைந்துள்ள தெருவிளக்கு களை அடுத்த பத்து நாட்களுக்குள் எரியவிடுவது என்றும், குடிநீர் முறை யாக வழங்கப்படாத பகுதிகளுக்கு அடுத்த 10 நாட்களுக்குள் வழங்குவது, தேசிய வேலை உறுதித் திட்டத்தில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வருடத்தில் நூறு நாட்கள் வேலை உறுதி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும், காவிரியிலிருந்து உபரி யாக சென்று கடலில் கலக்கும் நீரை புதுக்கோட்டை, சிவகங்கை இராமநாத புரம் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் திருப்பி விடும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். விவசாயத்தையும், விவசாயி களையும் பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசல் உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதி யிலும் அமுல்படுத்தக்கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.