tamilnadu

img

ரேசனில் அத்தியாவசியப் பொருட்களை முறையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.20-  சமையல் எண்ணெய், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்டுத்தக் கோரியும், ரேசன் கடை களில் குடும்பத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஏ.சாந்தா தலை மை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி சிறப்பு ரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் பி. சுசீலா, செயலாளர் டி.சலோமி, ஒன்றி யச் செயலாளர் எஸ்.பாண்டிச்செல்வி,  பொருளாளர் ஏ.ரஷியாபேகம் உள் ளிட்டோர் பேசினர். ஆர்ப் பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;