குன்றாண்டார்கோவில் ஒன்றி யத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 64, ஊராட்சிய ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் 504 என மொத்தம் 568 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் நான்கில் ஒரு பங்கு குளங்கள்கூட தூர்வாரப்பட வில்லை. இதனால், நீராதாரச் சேமிப்பு என்பது அரசின் மெத்த னப் போக்கால் சீர்குலைந்து வரு கிறது. இதனால், மழைக்காலங்க ளில் தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. மேலும், கிடைக்கின்ற நீரும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை யில் உள்ளது. குன்றாண்டார்கோ வில் ஒன்றியத்திலுள்ள ராசாப் பட்டி, தெம்மாவூர், கிள்ளனூர் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீரில் அதிக அளவு உப்புத்தன்மை உள்ளது. இது நூற்றுக்கணக்கானோ ருக்கு சிறுநீரகப் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது. இதன் காரணமாக 25-க்கும் மேற்பட்டோர் கடந்த சில ஆண்டுகளில் இறந்துள்ளனர். சுத்தமான குடிநீரை பெற வேண்டு மானால் குடத்திற்கு ரூ.10 கொடுத்தால் தான் கிடைக்கும் என்ற நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தொடர்ச்சியான போராட்டத் தின் காரணமாக உள்ளாட்சி அமைப்புகள் தற்பொழுது குடி நீரை சுத்திகரிக்கும் நடவடிக்கை யை மேற்கொண்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதி களில் விரிவான ஆய்வு மேற் கொண்டு குடிநீரை சுத்திகரிக்கும் பணியினை விரிவுபடுத்த வேண்டும். அனைவருக்கும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைக ளோடு, மக்கள் சந்திக்கும் ஏராள மான பிரச்சனைகளை முன்வைத்து ஞாயிறன்று (நவ.24) நடைபெறு கின்ற நடைபயணப் பிரச்சார இயக்கத்திலும், மாலையில் கீரனூ ரில் நடைபெற உள்ள பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திலும் பொது மக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுமாறு கட்சியின் ஒன்றியக்குழு அழைக்கிறது. கே.தங்கவேல், சிபிஐ(எம்) ஒன்றியச் செயலாளர், குன்றாண்டார்கோவில் ஒன்றியம்.