அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் மின்னித ழின் 50வது இதழ் வெற்றி விழா மற்றும் படைப்பாளிகள், பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அறந்தாங்கி இந்திய மருத்துவக் கழக கிளை தலைவர் மரு.பிரேம்குமார் தலைமை வகித்தார். ஐடியல் பள்ளி தாளாளர் சேக் சுல்தான், வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் வெங்கடேசன், மூத்த படைப்பாளி கவிவர்மன், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் விஜய் சிவானந்தம் முன்னிலை வகித்தனர். திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் வரவேற்றார். திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணா மூர்த்தி அறிமுக உரையாற்றினார். விழாவில் பத்திரிகையாளர்கள், திசைகள் மின்னிதழில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது. திசைகள் மின்னிதழின் பொறுப்பாசிரியர் அண்ணாத் துரை ஏற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் சேது.புகழேந்தி நன்றி கூறினார்.