tamilnadu

img

40,130 ஹெக்டேரில் புதுகை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு

புதுக்கோட்டை, நவ.7- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோ வில் வட்டாரத்தில் வேளாண் மைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்த தாவது:      புதுக்கோட்டை மாவட் டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பெருநாவலூர், வீரமங்களம், எசமங்களம் ஆகிய கிராமங்களில்; நடவு செய்யப்பட்டுள்ள நேரடி நெல் விதைப்பு பணிகள் பார்வையிடப்பட்டது. நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் செலவு குறைவதுடன், நெற்பயிரின் வாழ்நாளும் குறைவு. நீர் மற்றும் உரத் தேவையும் குறைவான அளவே தேவைப்படும். புதுக்கோட்டை மாவட் டத்தில் நடப்பாண்டில் சம்பா, குறுவை மற்றும் நவரை நெல் சாகுபடிக்கு 82,500 ஹெக்டேர் பாசன பரப்பு இலக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதில் சம்பா பாசனத் திற்கு 75,000 ஹெக்டேர் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 60,500 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட் டுள்ளது. இதில் நேரடி நெல் விதைப்பு பணிகள் மேற்கொ ள்வதற்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 40,000 ஹெக்டேர் இலக்கீடு நிர்ண யிக்கப்பட்டு, இதுவரை இலக்கீட்டை விட அதிக மாக 40,130 ஹெக்டேர் பரப்ப ளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.  நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.600 மானி யமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்கு இந்த ஆண்டு இலக்கீடாக ரூ.3 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை விவசாயிகளுக்கு ரூ.2.96 கோடி நேரடி நெல் விதைப்புக்கு விவசாயிக ளுக்கு மானியமாக வழங்கப் பட்டுள்ளது எனத் தெரி வித்துள்ளார். வேளாண் இணை இயக்குநர் சுப்பை யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புராஜ், வேளாண் உதவி இயக்குநர் ஜெயபாலன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.