tamilnadu

img

கள்ளச்சாராயம் ஒழிப்பு பேரணி

அறந்தாங்கி: புதுக்கோட்டை ஆட்சியரகம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இணைந்து புதன் மாலை ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்து கள்ளச்சாராயம் ஒழிப்பு மற்றும் மது பழக்கத்தினால் ஏற்படும் விளைவு குறித்து விழிப்புணர்வு பேரணி அறந்தாங்கி அரசுக் கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் தலைமையில் பேரணி தொடங்கியது.  பேரணியை, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் தொடங்கி வைத்தார். பேரணி நிறைவில் மதுவின் தீமைகள் பற்றிய தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. துணை வட்டாட்சியர் ஜபருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரி யில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது. முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் என்.கே.ராஜேந்திரன் வரவேற்றார் நிறைவாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ந.ஜீவரெத்தினம் நன்றி கூறினார்.