tamilnadu

சிபிஎம் எதிர்ப்பால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அறந்தாங்கி மருத்துவமனையில் இருந்து புதுக்கோட்டை மருத்துவமனைக்கு மாற்றம்

அறந்தாங்கி, ஜூலை 14- தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக மானதையடுத்து ஊரடங்கு கடைபிடிக்க ப்பட்டு வருகிறது. அதே போன்று அற ந்தாங்கியிலும் தொற்று வேகமாக பரவி வரு கிற நிலையில் தொற்று ஏற்பட்டு பாதி ப்படைந்தவர்கள் மாவட்டத் தலைநகரான  புதுக்கோட்டை ராணியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாவ ட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதிக்கப்ப ட்டவர்களை மாவட்டத் தலைநகர் மரு த்துவமனைக்கே கொண்டு சென்றனர்.  இந்நிலையில் திங்களன்று புதிதாக பாதிக்கப்பட்ட 18 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு அருகே உள்ள கட்டிடத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதனையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தற்போது ஏற்ப டுத்தப்பட்டுள்ள கொரோனா வார்டிற்கும், மகப்பேறு மருத்துவமனைக்கும் 10 மீட்டர் இடைவெளியே உள்ளது.

 இதனால் அங்கே பிரசவிக்கப்பட்டுள்ள 150-க்கும் மேற்ப்பட்ட பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமை யில், வர்த்தக சங்க தலைவர் வரதராஜன் மற்றும் சில கட்சியினர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்றனர்.  அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தி ற்கு விரைந்த வந்த மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக பணிகள்துறை மருத்துவர், மல ர்விழி, கோட்டாட்சியர் கிருஷ்ணன், காவ ல்துறை துணை கண் காணிப்பாளர் பாலமுரு கன், வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதி காரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அனுமதிக்கப்பட்ட 18 பேரை உடன டியாக புதுக்கோட்டை ராணியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரிக ளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனை வரும் கலைந்து சென்றனர். மீண்டும் இது போன்று நடந்தால் மக்களை ஒன்று திரட்டி  போராட்டம் நடத்துவோம் என சிபிஎம் மாவட்டச்  செயலாளர் கவிவர்மன் தெரிவித்தார்.