tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 20- நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் கொ ரோனா பரிசோதனை நடத்த  வலியுறுத்தி சிஐடியு சார்பில்  திங்கள்கிழமை புதுக்கோ ட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவ லகம் முன்பு சிஐடியு மாவ ட்டத் தலைவர் கே.முகம தலிஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், நியாய விலைக்கடை ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் பி.செ ல்வராஜ், தையல் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர்.  தினக்கூலி, காண்ராக்ட், சுய உதவிக்குழு, தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். தூய்மைப் பணி யாளர்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து அடை யாள அட்டை வழங்க வேண்டும். ஒரு மாத ஊதி யத்தை சிறப்பு ஊதிய மாக வழங்க வேண்டும். முக க்கவசம், கிருமிநாசினி, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை போதுமான அளவில் வழங்க வேண்டும். சம்பளப் பாக்கி, பஞ்சப்படி, நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழு ப்பப்பட்டன.