tamilnadu

img

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சிலம்ப வீரருக்கு பாராட்டு

புதுக்கோட்டை, அக்.21- புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீரமணிகண் டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் தங்கம் வென்றதையொட்டி முதன்மை செயலர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆகி யோர் வியாழக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார். இது குறித்து ஆட்சியர் தெரிவித்தது: புதுக்கோட்டை மாவட்டம், வேம்பங்குடியைச் சேர்ந்த பாஸ்க ரன்-விமலா தம்பதியரின் மகன் வீர மணிகண்டன் சிலம்ப போட்டியில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். கடந்த ஏப்ரலில் நாகர்கோவிலில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையேயான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று மலேசியாவில் நடைபெறும்  முதல் உலக சாம்பியன் ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.  இந்நிலையில், சில தினங்க ளுக்கு முன்பு மலேசியாவில் நடை பெற்ற உலக சிலம்பப்போட்டியில் இந்தியாவின் சார்பில் 80 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட னர். இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரமணி கண்டன் சீனியர் பிரிவில் ஒற்றை வாள் வீச்சுப்போட்டியில் தங்கப் பதக்கமும், குழு ஆயுத வீச்சுப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் நமது நாட்டிற்கும், நமது மாநிலத்திற்கும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் வீரமணிகண்டன் பெருமை சேர்த் துள்ளார். அதனடிப்படையில் சிலம்ப வீரர் வீரமணிகண்டனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். தெரிவித்தார்.