பொன்னமராவதி, செப்.22- ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர் மன்ற போராளிகளுக்கு பாராட்டு விழா பொன்னமராவதி ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் புதுப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஆசிரியர் மன்ற ஒன்றிய தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகநாதன் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் வெங்கடேசன் பழனி செல்வம் சண்முகநாதன் பெரிய தம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினார் போராட்டத்தில் சிறை சென்ற சரவணன் கவுரவிக்கப்பட்டார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.