tamilnadu

சிஐடியு சங்கப் பேரவை

அறந்தாங்கி, மார்ச் - புதுக்கோட்டை மாவட்டம் துரையரசபுரம் கூட்டுறவு நூற்பாலை, சிஐடியு சங்க ஆண்டு பேரவை நூற்பாலை முன்பு நடைபெற்றது. பேரவை கூட்டத்திற்கு சங்க தலைவர் எம்.எஸ்.ராமானுஜம் தலைமை வகித்தார். முத்து கருப்பன், கருப்பையா, தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.தங்கவேல் வரவேற்றார். சங்க செயலாளர் எம்.செல் வராஜ் வேலை அறிக்கை வைத்தார்.  பேரவையில் அரசின் குறைந்தபட்ச கூலி சட்டம் அரசாணை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை (ஜே1) 24 19.04.2018ன் படி பஞ்சாலைகளில் பயிற்சி யாளர்களுக்கு மற்றும் தின கூலி தொழிலாளர்களுக்கு மேற்கண்ட அரசாணை படி ரூ.434 வழங்க வேண்டும் உள்ளிட்ட திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மாவட்ட செயலாளா ஏ.ஸ்ரீதர், பஞ்சாலை மாவட்ட பொறுப்பாளர் எம்.ஜியாவு தீன் ஆகியோர் கோரிக்கை தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்கள். பஞ்சாலை சம்மேளன மாநில செயலாளர் எம்.அசோ கன் நிறைவாக உரையாற்றி னார். நிறைவாக சங்க பொரு ளாளர் தமிழரசன் நன்றி கூறினார்.