உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பாக சென்னையில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவன் நித்திஷ் மாநில அளவில் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் நித்திஷ், அவரது பயிற்றுநர்கள் செல்லப்பாண்டியன், மதுரைவீரன் ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் பி.எல்.வள்ளியம்மை, இயக்குநர் சிதம்பரம், பள்ளி முதல்வர் வே.முருகேசன் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.