பீகார் தேர்தலில் பாஜக வெற்றியடைந்தால் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா பேரிடரில் இருந்து நாடு முழுமையாக மீளாத சூழலில் தற்போது பீகாரில் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 28 தொடங்கி நவம்பர் 7வரை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமான கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் பாஜக பீகாரில் வெற்றி பெற்றால் மட்டும்தான் இலவசமாக தடுப்பூசியை வழங்குமா? மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு பீகார் மக்களின் உயிர் குறித்த அக்கறை இல்லையா?
அல்லது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இலவச தடுப்பூசி கொடுக்கப்படாமல் வஞ்சிக்கப்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.