மதுரை, ஜூலை 14- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கட்டடம், பாதாள சிறைச்சாலையா என ஆய்வு செய்யு மாறு மதுரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு பல அடுக்கு பார்க்கிங் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ஞாயிறன்று தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பூமிக்கடியில் பழங்கால தூண்கள், மண்டபம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன்கோவில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமை ந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்குக் கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ.40.19 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஞாயிறன்று இப்பகுதியில் பழங்கால மண்டபம், தூண்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அருகில் செங்கல் கட்டுமானமும் உள்ளது. இந்தப் பகுதியில் இராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை ஒன்று இருந்ததாகவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடம், அந்தச் சிறையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மதுரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.