சென்னை, ஏப்.3- சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கி ணைப்பதற்காக அமைக்கப்பட்ட பணிக் குழு வினருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சுகாதாரத் துறை உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.
பணியில் இல்லாத அரசு அதிகாரிகள் தேவை யற்ற பயணத்தை தவிர்க்க தமிழக அரசின் தலை மைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை, மின்சாரம், உள்ளாட்சித்துறை, மருத்துவம், சமூக நலத் துறையைச் சேர்ந்த பணி யாளர்கள் இந்த மக்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மற்ற துறைகளைச் சார்ந்த தற்போது பணியில் இல்லாத அதிகாரிகள் சாலை களில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசுப்பணி யில் இருக்கும் அதிகாரிகள் காவல்துறையினர் கேட்கும் போது உரிய ஐ டி கார்டை அரசு அதிகாரி கள் காண்பிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.