சிவகாசி, ஏப்.22- பிஆர்சி பட்டாசு நிறுவ னத்தின் உரிமையாளர் தோழர் பி.ராமச்சந்திரன், ஏப்ரல் 22 புதனன்று மாலை காலமா னார். அவருக்கு வயது 61. சிவகாசி அருகே பாறைப் பட்டியில் பிஆர்சி பட்டாசு நிறு வனத்தை துவக்கி பல் லாண்டு காலமாக நடத்தி வந்த பி.ராமச்சந்திரன், முன் னாள் போக்குவரத்து ஊழி யர் ஆவார். சிஐடியு உள் ளிட்ட இயக்கங்கள் மீது பற்று கொண்டவர். தீக்கதிர் நாளே ட்டின் மீது மிகுந்த மதிப்பும், அபிமானமும் கொண்டவர்.
உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர், மாரடைப் பால் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி பாறைப்பட்டி யில் வியாழனன்று நடக்கி றது. அவரது மறைவு செய்தி அறிந்து, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், பொது மேலாளர் ஜோ. ராஜ்மோகன், விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி உள்ளிட்டோர் அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரி வித்துள்ளனர்.