தருமபுரி, நவ. 15- நீர்வரத்து குறைந்து வரு வதால் ஒகேனக்கல்லில் வெள்ளியன்று (நவ.15) மாமரத்துக்கடுவு பகுதியில் இருந்து மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை யின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகே னக்கல்லுக்கு நீர்வரத்து அதி கரித்து, தற்போது கர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்ததால் ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து குறை யத் தொடங்கியது. ஒகே னக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருந்தது. மேலும் நீர்வரத்து சரிந்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்த தன் காரணமாக ஒகேனக்கல் லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் தடை விதிக் கப்பட்டு இருந்தது. தற்போது 6 ஆயிரம் கனஅடி நீர்வ ரத்து சரிந்து வருவதால் ஒகே னக்கல்லில் மாமரத்துகடுவு பகுதியில் இருந்து மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி யது. 6 நாட்களுக்கு பிறகு பரி சல் இயக்க அனுமதி வழங்கி யதால் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணி கள் பரிசலில் சென்று மகிழ்ந் தனர். தொடர்ந்து அருவி களில் குளிக்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவி களில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.