tamilnadu

img

பாசனத்திற்காக பெரியார் அணை அக்.18-ல் திறப்பு

சென்னை,அக்.15- பாசனத்திற்காக பெரியார் அணை 18 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரி வித்துள்ளார்.  இதுகுறித்து அரசு தரப்பில் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 18.10.2019 முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1037  மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுcள்ளது. இதனால்  5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து 18.10. 2019 முதல் 30 நாட்களுக்கு, விநாடிக்கு 98 கனஅடி வீதம், மொத்தம் 255 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.