tamilnadu

img

பெரம்பூர் ராஜு

சென்னையில் வளர்ந்து வந்த ரௌடியிசத்திற்கு எதிராக இயங்கியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 1994ல் ரௌடிகளுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட தொடர்ச்சியான உரசல்களின் நீட்சியாக காவலர் பாலாஜி ரௌடிகளால் குறி வைக்கப்படுகிறார். ரௌடிகளின் அராஜகங்களை எதிர்த்து வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு ஆதரவாக காவலர் பாலாஜி செயல்பட்டதே அதற்குக் காரணம். காவலர் பாலாஜி ரௌடிகளால் வெட்டப்பட, அதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து அப்பகுதியில் இருந்த ரௌடிகளின் வீடுகளைச் சூறையாடுகின்றனர். அதில் வெள்ளைக் கந்தன் என்பவனின் வீடு தரைமட்டமாகிறது. அப்பகுதியில் ரௌடிகள் இனி வாழ முடியாது என்ற நிலை உருவாகிறது. அவர்களால் அப்பகுதிக்கு மீண்டும் வர முடியவில்லை. இத்தகைய ரௌடிகளுக்கு எதிரான சமரசமற்ற போரில் முன் நின்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர் தோழர் ராஜேந்திரன் என்கிற ராஜுவை 1994ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் ரௌடிகள் படுகொலை செய்தனர்.

இத்தகைய அரகநாடு சுதாகரன், பெரம்பூர் ராஜு போன்ற எண்ணற்ற தோழர்களின் உயிர்த் தியாகத்தினால் வளர்ந்து வரும் இயக்கம்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

பெரணமல்லூர் சேகரன்

அரகநாடு சுதாகரன், பெரம்பூர் ராஜூ நினைவுநாள் (மார்ச் 12)