நாகர்கோவில், ஜூலை 25- குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளி களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப் படவில்லை என கூறி கடந்த வாரம் நோயா ளிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைதொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரிகளு டன் ஆலோசனை செய்து தனியார் ஹோட்டல்கள் மூலம் தினசரி உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யபட்டு உள் ளதாக அறிவித்து சென்றார். இந்நிலையில் சனியன்று நாகர்கோவில் அருகே இராஜாக்கமங்கலம் பகுதி யில் ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் மாணவர் விடுதியில் தங்க வைக்கபட்டு உள்ள கொரோனா நோயாளி களுக்கு உணவு, கபசுர குடி நீர், மாத்திரைகள், குடிக்க தண்ணீர் கூட கொடுக்க வில்லை என கூறி நோயாளி கள் தங்கும் அறைகளில் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு இல வசமாக உணவு வழங்கு கிறோம் என அரசு தரப்பில் அறிவித்து விட்டு இங்கே உணவுக்கு தலா ஒருவருக்கு 200 ரூபாய் கேட்பதாக கொரோனா நோயாளிகள் வேதனை தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.