தருமபுரி, ஆக. 6 - பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறி வித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. பின்னர் அந்த கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.முக மதுஅலி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆவின் நிர்வாகம் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக பால்கொள் முதல் விலையை உயர்த்த மறுத்து வருகிறது. கால் நடை தீவனம் 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.700 லிருந்து ரூ.1200-க்கு மேலாக உயர்ந்துள்ளது. எனவே, பால் கொள்முதல் விலை பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.40, எருமைப்பால் ஒரு லிட்டருக்கு ரூ.50 என உயர்த்தி மாநில அரசு அறிவிக்க வேண்டும்” என்றார். பால் நுகர்வோருக்கு முன்பணம் செலுத்தக் கோரும் ஆவின் நிர்வா கம், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கோவையைச் சேர்ந்த நிறுவ னத்துக்கு சுமார் ரூ.3 கோடி வரை பால் கடனுக்கு வழங்கியுள்ளது. இதே நிறுவனம் ஏற்கனவே விழுப்பு ரம் ஆவினுக்கு பல லட்ச ரூபாய் பாக்கி வைத்துள்ளது. தொடர்ந்து பாலை கடனுக்கு வழங்கியவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.