tamilnadu

img

தாக்குதலை நிறுத்தாத அரசுகள்: பழங்குடியின மக்கள் ஆவேசம்

சென்னை, ஜூலை 31- உத்தரப்பிரதேச மாநிலம் சோபாத்தா மாவட்டத்தில் உம்பா  கிராமத்தில் பழங்குடி மக்களை  சுட்டுக் கொன்ற மாபியா கும்பலை  கைது செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் யாருக்கெல்லாம் பட்டா  இல்லையோ அவர்களை யெல்லாம் வெளியேற்றலாம் என தீர்ப்பு வழங்கியது. அவர்களை வெளியேற்றக் கூடாது என மத்திய-மாநில அரசுகள் கூற வில்லை. காலங்காலமாக குடி யிருப்பவர்களை அப்புறப்படுத்த முடியாது என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் கூற வில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் ஆதிவாசி மக்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை அங்கிருந்து அப்  புறப்படுத்துவதற்கான நடவ டிக்கைகளும் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது என்று இந்த  ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆதிவாசி மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும், 3 தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த  மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். உத்திரபிரதேச மாநி லத்தில் 10 பேரை படுகொலை  செய்த அனைத்து குற்றவாளி களையும் கைது செய்ய வேண் டும், உயிரிழந்தவர்களின் குடும் பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார்கள். மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு தலைமையில் பொதுச்செய லாளர் இரா.சரவணன், பொருளா ளர் ஏ.பொன்னுசாமி, குறவர் பழங்குடியின சங்கத்தின் மாநி லத் தலைவர் ஏ.வி.சண்முகம், வேட்டைக்காரன் பழங்குடி சங்  கத்தின் மாநில பொதுச் செயலா ளர் இ.கெங்காதுரை, குருமன்ஸ் சங்கத்தின் தலைவர் எல்.சிவ லிங்கம், காட்டுநாயக்கன் சங்கத்  தின் மாநிலத் தலைவர் அய்ய னார், மாநில துணைத் தலைவர் எம்.அழகேசன், மாநில துணைச் செயலாளர் ஜி.ஆர்.பிராகாஷ், தென் சென்னை மாவட்டச் செய லாளர் சந்திரன் ஆகியோர் கோரிக்  கைகளை விளக்கிப் பேசினர்.