திண்டுக்கல்,டிச.6- திண்டுக்கல்லில் திட்டமிட்டபடி 11 மாதங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் தனியார் வங்கி நடத்திய ரத்த தான முகாமை அமைச்சர் விஜயாபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கு முதற்கட்டமாக மத்திய அரசு 137 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 150 மாணவர் சேர்க்கைக்கான இடங்களுடன் திட்டமிட்டபடி 11 மாதங்களில் திண்டுக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.