tamilnadu

img

பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம்ராஜா கைதை கண்டித்து முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் கடிதம்

கோவையில் சிம்பிளிசிட்டி இணைய ஊடகத்தை நடத்தி வரும் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம்ராஜாவை பொய்யான புகாரின் பேரில் ஆர்எஸ்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா காலத்தில் ரேசன் விநியோகத்தில் நிலவிய முறைகேடு தொடர்பாக, இன்னும் குறிப்பாக கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறையாக கிடைக்கிறது என்பது குறித்து செய்தி வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பத்திரிகையாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து அனுப்பியுள்ள கடிதத்தில், உண்மை செய்திகளை வெளியிடும் போது, அதனால் ஆத்திரமடைந்து சில தரப்பினர் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும், காவல்துறையினரை ஏவுவதையும் உட னடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.