பாட்னா:
பீகாரில், தங்களின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் பேருக்கு அரசுப் பணிவழங்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம்(ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்.
ஆனால், தேஜஸ்வி-யின் இந்த அறிக் கையை பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி விமர்சித்தது. 10 லட்சம் அரசு வேலைகள் பீகாரில் எங்கே இருக்கின்றன? என்றுகேள்வி எழுப்பியது.பின்னர், தேஜஸ்வியின் தேர்தல் வாக்குறுதிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதைப் பார்த்த பாஜக, தனதுதேர்தல் அறிக்கையில், “10 லட்சம் பேர் என்ன, நாங்கள் வென்றால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்” என்று, அப்படியே பல்டி அடித்தது.பாஜகவின் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுப் பேசியுள்ள தேஜஸ்வி, “தான் கூறுவது 10 லட்சம் அரசுப் பணிவாய்ப்பை என்றும், பக்கோடா விற்கும் வேலையை அல்ல!” என்றும் சூடு வைத்துள்ளார்.பக்கோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான் என்று பிரதமர் மோடி முன்பொருமுறை கூறியிருந்தார். இதனை மறைமுகமாக குறிப்பிட்டே தேஜஸ்வி பாஜகவுக்குசூடு வைத்துள்ளார்.‘அரசுப் பணி மற்றும் வேலைவாய்ப்பு இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. பக்கோடா சுடுவதும், சாலை கால்வாய்களை சுத்தம் செய்வதும் வேலைவாய்ப்பு. ஆனால், நான் சொல்வது அரசு அலுவலக பணி’ என்று விளக்கம் அளித்துள்ளார்.