சிதம்பரம், மே 27- விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கேட்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் குடியரசுத் தலைவருக்கு இ-மெயில் அனுப்பும் இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளரும், அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் துணைத் தலைவருமான கே.பால கிருஷ்ணன் இ-மெயில் அனுப்பும் இயக்கத்தை சனிக்கிழமை (ஜூன் 27) தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:
கொரோனா என்ற கொடிய நோயை தடுப்பதை விட்டு விட்டு மத்திய அரசு விவசாயிகள் மீதும் பொதுமக்கள் மீதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. வெள்ளியன்று மத்திய அரசு மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கும் நகர கூட்டுறவு வங்கிகள் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் என ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. ஏனென்றால் அதிலுள்ள டெபாசிட் தொகை ரூ. 4.75 லட்சம் கோடியை மத்திள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு தேவையானவர்களுக்கு கடன் வழங்குவ தற்காக இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். சென்னையில் மட்டும் இருந்த கொரோனா தமிழகம் முழுவதும் பரவிவிட்டது. கேரளாவைப் போல் பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும். அவை நல்ல பலன்களை கொடுத்துள் ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேட்டூர் அணை திறந்து தண்ணீர் காவிரி டெல்டா பகுதி க்கு வருகின்றது. முதலமைச்சரோ குடிமராமத்து பணிகளை ரூ.400 கோடிக்கு மேற்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால் எங்குமே பணி முழுமையடையவில்லை. அது கண்துடைப்பாகவே உள்ளது.
மேலும் வைரஸ் தொற்று உள்ளிட்ட அனைத்து பிரச்சனை களுக்கும் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களி லும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கிறார்கள். தமிழகத்தில் நோய் தொற்று குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தேவையில்லை என்று முதல்வர் கூறுகிறார். எதிர்க் கட்சிகள் கொடுக்கும் ஆலோசனையை பரிசீலனை செய்தாலே அனைத்து பிரச்சனையும் சரியாகும். இவ்வாறு அவர் கூறினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன், சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றியச் செய லாளர் வாஞ்சிநாதன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.