மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை,நவ.19- ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தை தற்கொலைச் சம்பவமாக கருதாமல் அதை நிறு வனப் படுகொலையாக வழக்குப் பதிவு செய்யக்கோரி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு சார்பில் செவ்வாயன்று (நவ19) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் (எப்எஸ்ஓ-டிஎன்) ஒருங்கிணைப்பாளரும் திமுக மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஐஐடி நிறு வனமோ, மாநில அரசோ தற்கொலை க்கு காரணமான பேராசிரியர்கள் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவோ, நடவடிக்கை எடுக்கவோ தயாராக இல்லை. இதுவரை குற்றவாளிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படவில்லை. அவர்கள் பணியில் இருப்பதால் குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளது.
பாத்திமா மரணம் மட்டுமன்றி ஏற் கனவே இதுபோன்ற பல மர ணங்கள் நடந்துகொண்டு இருக் கிறது. பாஜகவின் ஊடுருவலால் மிகப்பெரிய அறிவுஜீவிகளை உரு வாக்கும் ஐஐடி நிறுவனங்கள், புது டில்லி ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சாதி, மதவெறி யர்களின் கூடாரமாக மாறிவரு கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற அட்டுழியங்கள், அநியாயங்கள் நடைபெறுவதை மாநில அரசு தடுக்காவிட்டால் மாணவர் இயக்கங் களின் கூட்டமைப்பு நாடுதழுவிய கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்தும் என்று எச்சரித்தார்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் போராட்டத்தை தொடக்கிவைத்து பேசுகையில், மாணவி பாத்திமாவின் தந்தை, தனது மகளின் மரணம் குறித்து 10 வினாக்களை எழுப்பியுள்ளார். மாணவிக்கு தூக்குக் கயிறு கிடைத்தது எப்படி? உடன் இருந்த மாணவிகள் எங்கே? மரணத்திற்கு முன்பு உணவு விடுதியில் பேராசிரியரின் உள வியல் தொல்லை குறித்து ஒரு மணி நேரம் அழுது புலம்பியுள்ளார். அந்த நிகழ்வின் சிசிடிவி கேமிரா பதிவு எங்கே? என்ற கேள்விகளுக்கு பதில் இன்னும் வெளிவரவில்லை. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்று படிக்கவந்த மாணவியையும், அவரது பெற்றோர்களையும் தமிழ்நாடு அரசு ஏமாற்றியுள்ளது. இதற்கு ஆளும் அரசாங்கம் பதில் சொல்லவேண்டாமா?
திருச்சியில் வினாத்தாள் வெளி யாகி விட்டதாகவும் விசாரணை என்ற பெயரில் மூன்று மாணவிகளின் செல்போன்களை பறித்து அதில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து பிளாக்மெயில் செய்துள்ள னர். இதனால் மாணவிகள் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது என்றார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (திக மாணவரணி) பேசுகையில், 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் வரை தாழ்த்தப்பட்ட சமூக மாண வர்கள் 23 பேர் உயர்கல்வி நிறுவனங் களில் பலியாகி உள்ளதாக ஆய் வறிக்கைகள் கூறுகின்றன. சென்னை ஐஐ.டி.யில் இவ்வாண்டே நான்கு மரணங்கள் இவ்வாறு நிகழ்ந்துள்ளன என்று சொல்லப் படுகிறது என்றார்.
சீ.தினேஷ் (ஏஐஎஸ்எப்), நா.அசுவத்தாமன் (என்எஸ்யூஐ), வந்தியத்தேவன் (மதிமுக), பாரதி பிரபு (ஆர்எஸ்எப்), அன்சாரி (எம் எஸ்எப்), தமீம்அன்சாரி (எஸ்எம்ஐ), அஸாருதீன் (எம்ஐ), அப்துர்ரஹ் மான் (சிஎப்ஐ), சே.இளையராஜா (மாணவர் இளைஞர்இயக்கம்), கா.அமுதரசன்(ஏஐஆர்எஸ்எப்), ஆர்.இளம்வழுதி (தமிழர்பேரவை), நிருபன், சந்துரு, இசக்கி(எஸ்எப்ஐ) ஆகியோர் கண்டன உரையாற்றி னர். நிறைவாக அ.தமீம் அன்சாரி (மேற்கு மாவட்ட திமுக மாணவரணி) நன்றி கூறினார்.