குடவாயில் பாலசுப்பிரமணியன் பேச்சு
தஞ்சாவூர், நவ.15- ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தான் நிலம் அளவீடு செய்யப்பட்டு சுவடியில் பதிவு செய்யப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில், தஞ்சை பெரிய கோயில் அறக்கட்டளைச் சொற்பொழிவு வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இதில், “சோழர்கால ஆவணங்களில் மாமன்னன் ராஜராஜனும் பெரு மன்னன் ராஜேந்திரனும்” என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: “சோழர் காலத்தில் நில ஆவணம், விற்பனை ஆவணம் என அனைத்து ஆவணங்களும் பயன்பாட்டில் இருந் தன. திருவாரூர் கோயிலில் ராஜேந்திர சோழன் காலத்து வரலாறு அனைத்தும் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட் டுள்ளது. சோழர் காலத்தில் அரச முத்திரை என்கின்ற சோழர் இலச்சினை இருந்தது. இதில் புலி அமர்ந்த நிலையிலும், பக்கத்தில் மீன்களும், கீழே வில், அம்பும் காணப்பட்டது.
இது சோழர்களுக்கு சேர, பாண்டிய மன்னர்கள் கட்டுப்பட்டிருந்தனர் என்பதை குறிக்கிறது. இந்த இலச் சினை ராஜேந்திர சோழன் காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் புலி, மீன்கள், வில்-அம்புடன், ஈழத்து சின்ன மான சங்கு, சாளுக்கிய சின்னமான பன்றி, கடார அரசின் சின்னமான தோரண வாயில் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இது சேர, பாண்டிய மன்னர்கள் மட்டு மின்றி ஈழ, சாளுக்கிய, கடார மன்னர்க ளும் சோழ அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை குறிக்கிறது. ராஜராஜ சோழன் காலத்தில் தான் கிபி 1001ல் நிலங்கள் அளவை செய்யப்பட்டு சுவடியில் பதிவு செய்யப்பட்டது. இவற்றில் முக்கியமான ஆவணங்கள் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன” இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) கு.சின்னப்பன், அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை தலைவர் இரா.குறிஞ்சி வேந்தன், இணைப் பேராசிரியர் ஞா. பழனிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.