tamilnadu

img

கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தைத் தாண்டியது

பலி 160 ஆக அதிகரிப்பு

சென்னை, மே 30- தமிழகத்தில் சனிக்கிழமை 938 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது.  ஒரே நாளில் ஆறு பேர் உயி ரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 21,184 ஆகவும், பலி எண்ணிக்கை 160 ஆக வும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் சனிக் கிழமை மேலும் 938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 பேர் மஹாராஷ்டிராம்,  மேற்குவங்கம், தெலுங் கானா, கர்நாடகம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் ஆவர். இதனால் மொத்த பாதிப்பு 21,184 ஆக அதிகரித்துள்ளது.  ஒரே நாளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணி க்கை 160 ஆக உள்ளது. 687 பேர் குணம டைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12,000 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 13,980 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மட்டும் 616 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். மதுரையில் பத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 259 ஆக அதிகரித் துள்ளது. சிவகங்கை, தேனி, விருதுநகரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடித்தக்கது. தொற்று பரவல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்ட நிலையிலும் அது சமூகப்பரவல் நிலையை எட்டவில்லை என தமிழக அரசு கூறியுள் ளது குறிப்பிடத்தக்கது.