சென்னை, ஆக. 3- தொழிலாளர்களுக்கு துரோகமி ழைக்கும் மத்திய மோடி அரசை தொடர்ந்து எதிர்ப்போம் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சூளு ரைத்துள்ளன. மத்திய பாஜக அரசு முதலாளி களுக்கு ஆதரவாக தொழிலாளர் சட் டங்களை திருத்தும் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து சங்கங்களின் சார்பில் வெள்ளியன்று (ஆக 2) சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தொமுச மாநில பேரவைத் தலைவர் சுப்புராமன் பேசுகையில், மத்திய அரசின் பல்வேறு பிற்போக் குத்தனமான, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து போராட்டம் செய்து வருகிறோம். ஆண்டாண்டு காலமாக போராடி பெற்ற 44 தொழி லாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மோடி அரசு மாற்று கிறது. 13 நலச்சட்டங்களை ஒன்றாக மாற்றும் ஒரு சட்டத்தை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம். இது தொழிலாளர் விரோதபோக்காகும். குறைந்த பட்சம் 18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் போது குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.4ஆயிர மாக அரசு தீர்மானித்திருப்பது அநி யாயம். சேலம் உருக்காலை, மேற்கு வங்கம், ஆந்திரத்தில் உள்ள தொழிற்சாலைகள் கார்ப்பரேசன்க ளாக செயல்பட்டுவருகிறது. இதன் 100விழுக்காடு பங்குகள் விற்கப்பட்டு தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம் (ஐஎன்டியூசி) பேசுகையில்,ரயில்வே தனியார் மயம், ஐசிஎப் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பம் கொண்டு செயல் படும் தொழிற்சாலைகள் தனியார் மய மாக்கப்பட்டுள்ளது. ஓசிஎப் 41 யூனிடு களில் 1லட்சத்து 47 ஆயிரம் தொழிலா ளர்களின் பணிபாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என்றார்.
பாலாஜி
பாலாஜி (ஏஐயூடியூசி)பேசுகை யில், பிஎஸ்என்எல் நிறுவனம் அனைத்து உத்திரவாதங்களுடன் கார்ப்பரேசனாக்கப்பட்டு தற்போது ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மாக சம்பளம் வழங்க முடியாத பரி தாபநிலையில் பிஎஸ்என்எல் உள்ளது. பொதுத்துறை நிறுவனங் களை சீரழிக்கும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதக்கொள் கைக்கு எதிராக நாடுதழுவிய போராட் டம் நடத்துவோம் என்றார்.
டி.எம்.மூர்த்தி
டி.எம்.மூர்த்தி ( ஏஐடியுசி)நிரந்த ரத் தன்மை வாய்ந்த பணிகளில் நிரந்தரத் தொழிலாளர்களை பணி யமர்த்த வேண்டும், ஒப்பந்த தொழி லாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதி யம் வழங்க வேண்டும், போக்கு வரத்து துறையில் வேலைபளு, பழி வாங்கும் நடவடிக்கையாக ஊதிய வெட்டு, ஆய்வு பலன் தள்ளிவைப்பு, பதவி உயர்வு மறுப்பு, பணபலன் கள் வழங்காத நிலை உள்ளது. தொழிலாளர்களின் நலன் காக்கும் அடிப்படை கட்டமைப்பை சீரழிப் பது என அரசின் மோசமான போக்கை அடுக்கிக்கொண்டே போகலாம் என்றார்.
குமரேசன்
குமரேசன் (ஏஐசிசிடியூ) பேசுகை யில்,மோட்டார் தொழிலை கார்ப்ப ரேட் மயமாக்கும் மத்திய அரசு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. அரசுக்கு சொந்த மான சாலைகளை தனியாருக்கு கொடுத்து சாலைகளை பயன்படுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணை யம் (ஐஆர்டிஏ)என்ற பெயரால் இன் சூரன்ஸ் கட்டணம் கடந்த சில ஆண்டு களில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள் ளது இது பகற்கொள்ளையை விட மோசமானது. ஆகவே மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார்.
திருச்செல்வம்
திருச்செல்வம் (சிஐடியு) பேசுகை யில்,தொழிலாளர் உரிமைகள் மறுப்பு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்,பொதுமருத்துவத்தை சீர்குலைப்பது, கார்ப்பரேட் நிறுவ னங்களுக்குதடையில்லா கொள் ளைக்கு வழி செய்வது என்கிற நோக்கத்திலிருந்தேகொண்டு வரப் பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனிலிருந்து முன்வைக்கும் திருத்தங்கள் அனைத்தும் நிரா கரிக்கப்படும் அவலம் உள்ளது இது ஜனநாயகத்தின் மீது விழுந்துள்ள மரணஅடியாகும்.அனைத்துப்பகுதி மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவ தற்கு இந்திய அரசியல் சட்டத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற் சியை பாஜக நாடாளுமன்றத்தில் செய்துவருகிறது என்றார்.