tamilnadu

தேசியக் கொடி அவமதிப்பு - பாஜக தலைவர்கள் மீது வழக்கு

பாஜக தலைவர்கள் மீது  வழக்கு

கோவை, ஆக.18- கோவையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை அவமதித்த பாஜக தலைவர்கள் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நாடு முழுவதும்  74 ஆவது சுதந்திர தினம் எழுச்சியுடன் கொண் டாடப்பட்டது. இந்நிலையில், கோவை சரவ ணம்பட்டி பகுதியில் பாஜக கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் மண்டல தலைவர் வெங்கடேஷ், தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இதுகுறித்து  அப்பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் சரவணம் பட்டி காவல் துறையினர் வெங்கடேஷ் மீது தேசிய கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய் தனர். இதே செயலை செய்ததாக செல்வபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதியில் பாஜக வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், கோவை காந்திபுரம் பகுதியில் சாலையை மறித்து சுதந்திர தினம் கொண்டா டியதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொதுச்செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.