tamilnadu

img

பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு

சென்னை, ஏப்.16- கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு  இருக்கின்றன. 11ஆம்  பொதுத்தேர்வின் இறுதி தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி.  பொதுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனை வரும் ஆண்டின் இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அர சால் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நடத்தி முடிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் விடைத்  தாள்கள் திருத்தும் பணியும் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்ததும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்த தேதி  அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்  பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு 10 நாட்கள் இடைவெளிவிட்டு தான் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1 ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்படும். பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத் தும் பணிகள், உள்ளிட்ட பணிகள் இருப்பதால் பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு  இருப்பதாகவே கூறப்படுகிறது.

;