tamilnadu

img

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதலமைச்சர் ஆலோசனை

சென்னை,ஜன.27- 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள்  தொகை கணக்கெடுப்பை தமிழ கத்தில் செயல்படுத்துவது குறித்து  தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோ சனை மேற்கொண்டார். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை  நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 ஆம் ஆண் டுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ளது. அதற்கான பணிகள் வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்துக்குள் நடத்தி முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக கணக் கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கி றார்கள்? அவர்களின் பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்  களா?, குழந்தைகளின் விவரங்கள் உள்ளிட்ட 28 கேள்விகள் கேட்கப் பட உள்ளன. கடந்த காலங்களில் காகித முறையில் நடைபெற்றுவந்த கணக்  கெடுப்பு பணி, இம்முறை முதல்  முறையாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி களை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோ சனை மேற்கொண்டார். வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பல்வேறு துறைகளின் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

;