நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.மசூதிகள் அனைத்து அடைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர்.
இறைத்தூதர் இப்ராஹீமின் தியாக வாழ்க்கையை நினைவு கூறும் விதமாக இஸ்லாமியர்களைால் கொண்டாடபடுவது பண்டிகை பக்ரீத். வழக்கமாக பள்ளி வாசல்களில் அதிகாலை சிறப்புத் தொழுகையுடன் பக்ரீத் கொண்டாட்டம் தொடங்கும். கொரோனா காரணமாக பல இடங்களில் பள்ளிவாசல் திறப்பிற்கு தடை இருப்பதால் வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.