தஞ்சை வெ.கோபாலன் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் போராட் டத்தின்போது கோவை சூலூர் விமான நிலையம் தீக்கிரையான வரலாறு அனைவருக்கும் தெரிந்த செய்தி. இந்த போராட்டத்தின்போது முன்னணியில் இருந்தவர் கோவை பி.வேலுசாமி. இவர் தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டு தொழிற் சங்க இயக்கத்திலும், சுதந்திரப் போராட் டத்திலும் கலந்து கொண்டவர். 1920 ஆம் ஆண்டு பழனிசாமி நாயுடு வுக்கு மகனாகப் பிறந்தார். 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பம்பாய் காங்கி ரசில் “வெள்ளையனே வெளியேறு” எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி “செய் அல்லது செத்து மடி” எனும் அறைகூவலை மக்களுக்கு விடுத்தார். தலைவர்கள் கைது செய்யப் பட்டதும், வழிகாட்டுதல் இல்லாத மக்கள் கூட்டம் தன்னிச்சையாக போராட் டத்தைத் தொடங்கி விட்டனர். ஆகஸ்ட் போராட்டத் தொண்டர்கள் கோவையில் ரகசியமாகக் கூடி ஆலோசனை நடத்தி னார்கள். இன்னார் இன்ன வேலைகளைச் செய்வது என்று முடிவாகியது. அதன் படி வேலுசாமி பைக்காரா மின் நிலை யத்தைத் தகர்ப்பது என்று முடிவாகியது. அதற்காக இவரும் வேறு பல தொண் டர்களும் எவ்வளவு முயன்றும், அங்கி ருந்த பலத்த காவல் காரணமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கோவையில் இருந்த இம்பீரியல் வங்கி (தற்போது ஸ்டேட் வங்கி) யைத் தாக்க முயன்று அதிலும் தோல்வி கண்டனர்.
அடுத்ததாக சூலூர் விமான நிலை யத்துக்குத் தீ வைப்பது என்ற முடிவில் இவர்கள் பலர் ஒன்றுகூடி ரகசியமாகச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் பல குழுக்களாகப் பிரிந்து நாலா திசை களிலும் தீ வைத்துவிட தீ நன்கு பற்றி எரியத் தொடங்கியது. இவர்கள் ஓடி தலைமறைவாகி விட்டனர். ஆங்கிலேய காவல்துறை இவர்களைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டனர். ஆனால் இவர்களோ மாறு வேடமணிந்து கொண்டு காவலர்களின் கையில் அகப்படாமல் தலைமறைவாக ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார்கள். அப்ப டிப் போகின்ற இவர்களுக்கு ஆங் காங்கே அடைக்கலம் கொடுத்து காப் பாற்ற ஏராளமான தேசபக்தர்கள் இருந் தார்கள். இவர்கள் பிடிபட்டால் அவர்க ளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் மாட்டிக்கொண்டு சிறை செல்ல நேரு மென்பது தெரிந்திருந்தும் தைரியமாக இதனைச் செய்தார்கள். இருப்பினும் இறுதியாக வேலுச்சாமி கைது செய்யப் பட்டு காவல் நிலையம் கொண்டு செல் லப்பட்டார். இதனையடுத்து அவரை நிர்வாணமாக்கி மாட்டு சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றி அபிஷே கம் செய்தனர். இதன்பின் மிகக் கொடூ ரமான தாக்குலுக்கு ஆளானார். இந்த தாக்குதலில் இவரது முதுகு தண்டுவடத் தில் பலத்த காயமும், மூளையில் நரம்பு ஒன்று துண்டிக்கப்பட்டதாம். இப்படிப் பலநாட்கள் சித்தரவதைக்குப் பின் வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் தொடர்ந்து குருதி கொட்டத் தொடங்கி யது. இவ்வாறு குற்றுயிரும், குலை உயிரு மாக விசாரணை கைதி என்ற பெயரில் சிறையில் வாடினார். இதையடுத்து அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவ மனையில் சிகிச்சைகள் கொடுக்கப்பட் டன. இருப்பினும் கடுமையான தாக்குத லுக்கு உள்ளானதால் இவர் அடிக்கடி நினைவாற்றலை இழக்கத் தொடங்கி னார். கை நடுக்கம் ஏற்பட்டு எதனையும் பிடிக்கவோ, சாப்பிடவோ, எழுதவோ முடியாமல் போயிற்று. இவர் சிறைவா சம் முடிந்து வெளியேறிய பின்னரும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தில் பங்கு கொண்டார். 1967ல் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பி னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப் போதைய தி.மு.க. அரசில் விவசாய மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி ஒன்றரை மாதம் சிறையில் இருந்தார். ஒரு மருத்துவமனைக்கு தொழிலாளர் தலை வர் என்.ஜி.ராமசாமியின் பெயரை வைக்க வற்புறுத்தி போராடி சிறை சென் றார். பிறகு 1972ல் மறைந்தார்.
(ஆதாரம் - சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள் தொகுப்பில்)