சென்னை, பிப்.22- அண்மையில், அமெலொபிளாஸ் டோமா என்ற அரியவகை நோய் பாதிப் புக்கு உள்ளான, ஆப்பிரிக்காவின் டான் ஸானியா நாட்டைச் சேர்ந்த 38 வயதுள்ள நோயாளி ஒருவருக்கு சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் முழுமையான சிசிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வடபழனி சிம்ஸ் மருத்துவமனை யின் மண்டை ஓடு, முக எலும்பு மற்றும் தசை சீரமைப்பு அறுவை சிசிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் கே. ஸ்ரீதர், டான்ஸா னிய நோயாளிக்கு கீழ்தாடையில் ஒருகிலோ எடை கொண்ட கட்டி, அமெலொ பிளாஸ்டோமா என்ற நோய் என்பதையும், அந்தக் கட்டியின் அளவு பெரிதாக இருப்ப தால், சிக்கலான அறுவை சிசிச்சை மூலம் தான் அதை நீக்க வேண்டும் என்பதோடு, அதனால் பாதிப்புக்கு உள்ளான முக வடி வத்தையும், அதற்கான எலும்புகளையும் வெட்டி…, ஒட்டி சீரமைக்க வேண்டிய கட்டா யம் இருப்பதை உணர்ந்தோம். மேலும், இந்தப் பணிகளைச் செய்யும்போது, கூடவே அவரது இயல்பான முக வடிவம் மீள்வதை உறுதி செய்வதோடு, அவரது குரல், உணவுப் பாதை போன்ற எதிலும் பாதிப்பு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள பல்வேறு கணக்குகளும் அவ சியமானது.
அந்த வகையில், அவரது கீழ்தா டையை முற்றிலுமாக சீரமைக்க வலது மற்றும் இடது புற தாடை எலும்புகளில் திருத்தங்கள் தேவைப்பட்டன. எனவே அதை 4 துண்டுகளாக சித்தரித்து வடிவ மைக்க, கம்ப்யூட்டரில் அவ்வடிவத்தை உருவாக்கி செயல்பாட்டைச் சோதிக்க வேண்டிவந்தது. அதன் இறுதியில்தான் இயல்பான மனித முகவடிவத்தை உரு வாக்க முடிந்தது என்றார்.