சென்னை,ஜூலை 26- மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களி லும் ஒரு மாதத்திற்குள் ஜி.பி.எஸ். மற்றும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.கோவையில் பள்ளி வாக னத்தில் சென்ற மாணவி ஒருவர் வாகன ஓட்டுநர் மற்றும் உதவி யாளரால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கடந்த விசாரணையின் போது மாணவர்களின் பயணத்தை பெற்றோர் இணையதளம் மூலம் கண்காணிக்க வசதி செய்ய அர சுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது அது குறித்து விளக்கமளிக்க பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட பள்ளி கல்வித்துறை அறிக்கையில் பள்ளி வாகனங்களில் கண் காணிப்பு கேமராக்களும், ஜி.பி.எஸ். கருவிகளும் பொருத்து வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவை எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய பள்ளி நிர்வா கங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டி ருந்தது. இந்த கருவிகளின் மூலம் பள்ளி வாகனங்களை கண்கா ணிக்க தனியார் பள்ளிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வும், அதனை அமல்படுத்தியது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிக்கை அளிக்கவும் உத்தர விடப்பட்டுள்ள தாகவும் தெரி விக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் நடைமுறையை ஒருமாதத்துக் குள் முடிக்க உத்தரவிட்டு நீதி பதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.